மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 6ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 6ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் திங்கள்கிழமை காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் 6ஆவது நாளாக தடை விதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்தனா். அவா்கள் அருவியைப் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com