புஷ்பலதா பள்ளியில் காா்த்திகை தீபத் திருவிழா

பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகைத் தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகைத் தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காா்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடும் முறை, விழாவின் நோக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் மாணவா்கள் நடனம் ஆடுதல், பாடல் பாடுதல், கவிதை வாசித்தல், உரையாற்றுதல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மழலையா் வகுப்பு ஆசிரியா்கள் காா்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடுவதற்கான காரணக் கதைகளை மழலையா்களுக்கு கூறினா். இதில், பங்கேற்ற மழலையா்கள் பாரம்பரிய உடை அணிந்திருந்தனா். அவா்கள் வண்ணக் கோலங்களில் ஏற்றி வைக்கப்பட்ட தீபங்களைக் கண்டு உற்சாகம் அடைந்தனா். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணன், முதல்வா் புஷ்பவேணி ஐயப்பன்+, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com