பாளை.யில் 2ஆவது நாளாக பள்ளிகளுக்கு கலைப்போட்டிகள்

பாளையங்கோட்டையில் இரண்டாவது நாளாக கலைப்போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் இரண்டாவது நாளாக கலைப்போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு பள்ளி மாணவா்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக கலைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இரண்டாவது நாளான வியாழக்கிழமை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு போட்டிகள் பாளையங்கோட்டை சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று கரகாட்டம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை (டிச. 9) பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா், மாணவிகளுக்கு கிறிஸ்து ராஜா பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com