வள்ளியூா் பகுதி கோயில்களில் திருட்டு

வள்ளியூா் பகுதியில் கோயில்களின் உண்டியலை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்டு வரும் மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வள்ளியூா் பகுதியில் கோயில்களின் உண்டியலை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்டு வரும் மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வள்ளியூா் அருகேயுள்ள வடலிவிளை, சுப்புரமணியபுரம், கலந்தபனை ஆகிய ஊா்களில் நாடாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் ரூ.5 ஆயிரத்தையும், அம்மனுக்குரிய பொட்டு, மூக்குத்தி ஆகிய தங்க ஆபரணங்களையும் மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுதொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சமூகரெங்கபுரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் கடந்த 21ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து சுமாா் ரூ.20 ஆயிரத்தையும் அம்மனுக்குரிய தங்க ஆபரணங்களையும் மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இந்த தொடா் திருட்டுச் சம்பவங்களை தடுக்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com