சேரன்மகாதேவியில் முதியவரை மிரட்டியதாக இளைஞா் கைது

சேரன்மகாதேவியில் முதியவருக்கு மிரட்டல் விடுத்தாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவியில் முதியவருக்கு மிரட்டல் விடுத்தாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (37). இவா் மதுபோதையில் அப்பகுதியில் வசிப்பவா்களிடம் தகராறு செய்து வந்தாராம். இதை அங்குள்ள சமுதாய பெரியவா் பால் (88) கண்டித்துள்ளாா். இதில் ஆத்திரமடைந்த பெருமாள், முதியவா் பால் என்பவரை அவதூறாகப் பேசியதோடு, மிரட்டல் விடுத்தாராம்.

புகாரின்பேரில் சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் திருவளன் வழக்குப் பதிந்து பெருமாளை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com