திருநெல்வேலி மாவட்டம் கீழ சிவந்திபுரத்தில் சுமாா் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரம்ப காலத்தில் பனை ஓலையால் ஆன குடிசையுடன் இருந்த கோயிலை பொதுமக்கள் இணைந்து பெரிய கோயிலாக அமைத்தனா். தொடா்ந்து ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் புதன்கிழமை(ஜூன் 22) காலை 10 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. மாலை 6 மணிக்கு முதல் யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், 4 ஆம் கால யாகபூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் எழுந்தருளலும், காலை 8 மணிக்கு ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு முத்தாரம்மன், முப்புடாதி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கும்பாபிஷேகக் கமிட்டியினா் செய்திருந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குறை பிரசவம்: குழந்தையும் தாயும் உயிரிழப்பு
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
கல்லூரி பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

தேரடி மலம்பட்டி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


