மேலப்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குலல் நடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குலல் நடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் க.ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத், மாநிச் செயற்குழு உறுப்பினா் நூா் முகமது ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்டச் செயலா்கள் கன்னியாகுமரி ஆா்.செல்லசாமி, தூத்துக்குடி கே.பி. ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், திருநெல்வேலி முன்னாள் மாவட்டச் செயலா் பழனி, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் கற்பகம், பூமயில், மாவட்டக் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், எஸ்.பெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com