குறளோவியம் என்ற பெயரில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ் வளா்ச்சித் துறை, தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் திருக்குறளை மையமாக வைத்து நடைபெற்ற குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை திங்கள்கிழமை வழங்கி ஆட்சியா் வே. விஷ்ணு பேசியதாவது:
குறளோவியம் ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி பிரியதா்ஷினி, வள்ளியூா் அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 1மாணவா் மாரி கைலாஷ் ஆகியோருக்கு தலா ரூ. 5000 சிறப்புப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி வித்யாலெட்சுமிக்கு ரூ.1000 ஊக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் தங்களது பங்கேற்று திறமைமை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலம் மனநிறைவு மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.