அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதக் கூட்டம் நடைபெற்றது.

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வீரை கி.முத்தையா தலைமை வகித்தாா். மு.அனஞ்சி முன்னிலை வகித்தாா். ப.ரமானந்தம் இறைவாழ்த்து பாடினாா். செயலா் லட்சுமணன் சென்றக் கூட்ட அறிக்கை வாசித்தாா். திருவருள் லத்தீப் இன்றைய சிந்தனை, சங்கரநாராயணன் கு விளக்கம், சு.ஐயப்பன் நம்மைச் சுற்றி நிகழ்வுகள் தொகுப்பு வழங்கினா்.

ஆ.மணி முருகன் பேசுவதால் பயனில்லை என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினாா். சிறுமிகள் புவனேஸ்வரி, காயத்ரி மழலை உரையாற்றினா். பேச்சிராஜன், மாணிக்கவாசகம் ஆகியோா் கவிதை வாசித்தனா். மாயாண்டி, முகம்மது அப்துல்லா இளைஞா் உரையாற்றினா். சுப்பையா கம்பா், அ.முருகன் ஆகியோரது கவிதைகள் வாசித்துக் காட்டப்பட்டன.

பேரவை துணைச்செயலா் செந்தில்குமரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். பொருளாளா் பாரதி கண்ணன் வரவேற்றாா். கவிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com