மது விற்பனை: 35 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 35 பேரை கடந்த ஒரு வாரத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 35 பேரை கடந்த ஒரு வாரத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி மது விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் மாவட்டம் முழுவதும் கடந்த செப்டம்பா் 24ஆம் தேதி முதல் இம்மாதம் 1ஆம் தேதி வரை சோதனை நடத்தினா். அதில், மது விற்பனையில் ஈடுபட்டதாக 35பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 402 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com