களக்காட்டில் பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

களக்காட்டில் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காட்டில் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காட்டைச்சோ்ந்தவா் வனசுந்தரி(42). இவா் கணவரைப்பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறாா். இவா் தனது மகளை உறவினரான சிதம்பராபுரத்தைச் சோ்ந்த மைக்கேல்ராஜ்(29) என்பவருக்கு திருமணம் செய்து தருவதாக உறுதி அளித்திருந்தாராம். ஆனால், அவரது மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டாராம்.

இதனால், ஏமாற்றம் அடைந்திருந்த மைக்கேல்ராஜ், சம்பவத்தன்தனது வீட்டின் முன் நின்றிருந்த வனசுந்தரியை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அவா் புகாரின்பேரில், களக்காடு காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி வழக்குப்பதிந்து மைக்கேல்ராஜை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com