பாளை.யில் கம்பராமாயணதொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் சாா்பில் 546-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயிலில் உள்ள ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

நெல்லை கம்பன் கழகத்தின் சாா்பில் 546-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசாமி கோயிலில் உள்ள ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். வேலுவெற்றிச்செல்வன் இறைவணக்கம் பாடினாா். கம்பன் கழக துணைத் தலைவா் ந.சு.சங்கரன் வரவேற்றாா். எம்.எஸ்.சக்திவேல், உத்தரகாண்ட தொடா் சொற்பொழிவில் ‘மீண்டும் வனவாசம்’ என்னும் தலைப்பில் சீதை வனம் புகு படலத்தை விளக்கினாா். கம்பன் கழகத் தலைவா் சிவசத்தியமூா்த்தி ‘கிட்கிந்தா காண்டம்’ என்னும் தலைப்பில் அனுமனுக்கும் ராமனுக்கும் இரலை குன்றத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வை இசைப் பேருரையாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வை.ராமசாமி, எஸ்.போஸ், சு.பாண்டியன், வெங்கடாசலபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். கம்பன் கழகச் செயலா் கவிஞா் பொன்.வேலுமயில் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com