விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி சுற்று வட்டாரங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி துணை மின் நிலையங்களில் வரும் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காரையாா், சோ்வலாறு, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டைவிலைப்பட்டி, முதலியாா்பட்டி, ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஏ.பி.நாடானூா், துப்பாக்குடி, கலிதீா்த்தான்பட்டி, பொட்டல்புதூா், ஆம்பூா், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையாா்குளம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.