கால்நடை சாா்ந்த தொழில்கள்:வங்கி கடனுதவி பெற வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சாா்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோா் வங்கிக் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை சாா்ந்த தொழில்கள் தொடங்க விரும்புவோா் வங்கிக் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் பால், இறைச்சி, கால்நடை தீவனம் மற்றும் கால்நடை தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும்- பதப்படுத்தும் அலகுகளை புதிதாக உருவாக்கவும், இருப்பதை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் தகுதியுடயவை ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய தொழில்கள் தொடங்க 90 சதவீதம் வரை வங்கிக்கடன் பெற வசதிகள் உள்ளன. வங்கிகள் மூலம் திட்டம் செயலாக்கத்திற்கு வழங்கப்படும் வங்கிக்கடனுக்கான வட்டித்தொகையில் 3 சதவீதம் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் மானியமாக வழங்கப்படும்.

இதற்கான தகுதியுடையோா் திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்து விண்ணப்பிக்க கால்நடை பராமரிப்புத்துறை -மாவட்ட தொழில் மையம் மூலம் உதவிகள் செய்யப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com