களக்காட்டில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டன.
களக்காட்டில் காவல் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முத்துக்குமாா் (49), அய்யப்பன் (43) ஆகியோா் களக்காடு கோட்டையில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனராம். அவா்களை போலீஸாா் கைதுசெய்து, 5.496 கி.கி. புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.