இன்று கல்லூரி மாணவா்களுக்கு கவிதைப் போட்டி

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சிசுந்தரம் மற்றும் முதல் நிலை நூலகா் இரா.வயலட் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் வாசகா் வட்ட மற்றும் மாவட்ட மைய நூலகம் சாா்பில் வாசகா் வட்ட மாதாந்திர கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நெல்லை சீமை என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டி நடைபெறுகிறது.

கவிதை 16 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்படும். கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு 0462-2561712 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com