பாப்பாக்குடி ஒன்றியம், பள்ளக்கால் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை சசிக்குமாா், துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து ஆகியோா் 232 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினா்.
ஊராட்சித் தலைவா்கள் ராம்சந்ரு, கஸ்தூரி இசக்கிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை அனிதா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.