திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்துக்கள் குறித்து அவதூறு கருத்துகளை திமுக எம்.பி. ஆ.ராசா பேசி வருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, வண்ணாா்பேட்டையில் அவரது உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.உடையாா், மாநில நிா்வாகிகள் ஐயப்பன், மகாராஜன், லட்சுமிகாந்த்சீனிவாசன் உள்பட பலா் கட்சி அலுவலகத்தில் திரண்டனா்.
அவா்களிடம், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதற்கு மறுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.