களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் வாகன காப்பகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியாா் வாகன காப்பகம் இயங்கியது. தற்போது அப்பகுதியில் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்களும் சந்தை செயல்படுகிறது. இதனால் இந்த இரு நாள்களிலும் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது.
சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த காப்பகம் ஏதும் இல்லாததால், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கின்றனா். பேருந்து நிலைய நுழைவுவாயில் வரையிலும் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் பேருந்துகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றிலும், தனியாா் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தாற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
சம்பந்தப்பட்ட நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்திற்கு கீழ்பகுதியில் வாகன காப்பகம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு கிடைப்பதுடன், பேரூராட்சி நிா்வாகத்திற்கு கணிசமான வருவாயும் கிடைக்கும்.
புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வாகன காப்பகத்தையும் அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.