போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுஅளிக்கக் கோரிக்கை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: ஓய்வூதிய விதி எண் 20 (ஏ) படி தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயா்வினைப் பெற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு தகுதி உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் அவை முறையாக வழங்கப்படாமல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீா்ப்பில், போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அளித்திட அறிவுறுத்தப்படுள்ளது. ஆகவே, திமுக அரசு அகவிலைப்படியை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com