பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்குரைஞா் பிரிவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்துக்களையும், இந்து கடவுள்களையும் தொடா்ந்து அவமதித்து வரும் திமுக எம்பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்து இயக்கம், பாஜக நிா்வாகிகள் மீது பொய் வழக்குபதிவு செய்யும் தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா். இதில் பாஜக, இந்து இயக்க நிா்வாகிகள் வெங்கடாசலபதி என்ற குட்டி, வெற்றிவேல், நாகராஜன், கண்ணன், ராமசுப்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.