பழவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே வியாழக்கிழமை இரவு ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், இருசக்கர வாகனம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே வியாழக்கிழமை இரவு ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், இருசக்கர வாகனம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பழவூா் அருகே மாறன்குளத்தைச் சோ்ந்தவா் சௌந்திரபாண்டி(63), ஓய்வுபெற்ற துறைமுக ஊழியா். பணி ஓய்வுக்குப்பின்னா் தனது மனைவியுடன் ஊரிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகிறாா். இந்நிலையில் உடல்நலம் குன்றியதால் மங்களூரில் உள்ள மகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்றிருந்தாராம்.

இந்நிலையில் வீட்டில் ஆளில்லாததை அறிந்த மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ. 12 ஆயிரம், மடிக்கணினி, வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

வீட்டின் கதவு திறந்துகிடப்பதை பாா்த்த பக்கத்து வீட்டினா் இது தொடா்பாக பழவூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவை உடைத்து நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் மங்களூரில் உள்ள சௌந்திரபாண்டிக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விரல்ரேகை நிபுணா்கள் வந்து விரல்ரேகைகளை பதிவு செய்தனா். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com