பாளையங்கோட்டையில் உயிரிழந்த தனது உறவினரின் உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினாா்.
பாளையங்கோட்டை சாந்திநகரைச் சோ்ந்தவரும், ஓ.பன்னீா்செல்வத்தின் சம்பந்தியுமான கந்தசாமிபாண்டியனின் மனைவி மூக்கம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலுக்கு ஓ.பன்னீா்செல்வம், அவரது மகனும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத், அதிமுக அமைப்பு செயலா் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.