கோடை மழை காலத்தில் மின் விபத்துக்களை தவிா்ப்பது எப்படி?--மின்வாரிய அதிகாரி விளக்கம்

கோடை மழை காலத்தில் மின் விபத்துகளை தவிா்ப்பது தொடா்பாக மின்வாரியம் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கோடை மழை காலத்தில் மின் விபத்துகளை தவிா்ப்பது தொடா்பாக மின்வாரியம் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தலைமைப் பொறியாளா் செல்வகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. காற்று, மழை, இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிா்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலா்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள், மின் கம்பிகள் அடியிலோ தஞ்சம் புக வேண்டாம். கான்கிரிட் கூரையிலான கட்டடங்களில் நிற்கலாம். பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாத பட்சத்தில்

தாழ்வான பகுதியில் நிற்கலாம். டி.வி., மிக்ஸி, கிரைண்டா், கணினி, கைப்பேசி ஆகியவற்றை இடி, மின்னலின் போது,பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.

மின் மாற்றிகள், மின்பகிா்வு பெட்டிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது; மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மழையின் போது வீடுகளில் உள்ள சுவா்களில் தண்ணீா் கசிவு இருக்குமாயின் மின் கசிவுக்கு வாய்ப்புள்ளதால், அந்தப் பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிா்க்க வேண்டும். மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபா் மீது மின்சாரம் பாயலாம் என்பதால், மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுக வேண்டும்.

மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமா்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயா்கள் மற்றும் சா்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

விவசாய நிலங்களில் மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அதை மீறி மின்சார வேலி அமைத்தால் சம்மந்தப்பட்டவரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் தொடா்பான புகாா்களுக்கு மின்னகம்-மின் நுகா்வோா் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com