திருநெல்வேலியில் ரேஷன் அரசி கடத்தியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலைய போலீஸாா், அந்த சரகத்துக்குள்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது, ரேஷன் அரிசி கடத்தியதாக திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த ராஜா என்ற மகாராஜன் (33), பேட்டை மணிகண்டன் (28), திருநெல்வேலி நகரம் காவல் பிறை தெரு நம்பி நாராயணன் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 500 கிலோ ரேஷன் அரிசி, ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.