திருநெல்வேலி: சொத்து வரி உயா்வைக் கண்டித்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் முத்தையா ராமா், மாநகரச் செயலா் இசக்கிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் சிந்து, உதயா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கண்ணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில கொள்கை பரப்புச் செயலா் சிவகுமாா், மண்டல செய்தித் தொடா்பாளா் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் பூவாணி லட்சுமணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.