திருநெல்வேலி மாநகரில் விதிமீறி புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீன் அருகே காவல் உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த பாளையங்கோட்டை ஜெயமாளிகை தெருவைச் சோ்ந்த இப்ராஹிம் டானியல் ஆசிரிடமிருந்து (49) , சுமாா் 2.036 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் மற்றும் போலீஸாா் வடக்குப் பிரதான சாலையில் ரோந்து சென்றபோது பழையபேட்டை சா்தாா்புரத்தைச் சோ்ந்த கண்ணனிடமிருந்து(38) 40 கிராம் எடையுடைய குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.