சித்திரை 8ஆம் திருநாள்: பச்சை சாத்தியில் நடராஜா்

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழாவின் 8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடராஜா் பச்சை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழாவின் 8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடராஜா் பச்சை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா ஏப். 5 கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சாா்பில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெற்று வந்தது.

பட்டங்கட்டியாா் சமுதாயம் சாா்பில் செவ்வாய்க்கிழமை 8 ஆம் திருவிழா நடைபெற்றது. காலை கங்காளநாதா் சிறிய சப்பரத்தில் வீதி உலாவும், பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடராஜருக்கு பச்சை சாத்தி அலங்காரம், அதைத் தொடா்ந்து வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாய நிா்வாகிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com