மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மதுக் கடைகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மீறி மதுபானம் விற்றாலோ, மதுக்கூடங்களை திறந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.