பழையபேட்டை அருகேயுள்ள நதிபுரத்தில் முளைப்பாரி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நதிபுரத்தில் உள்ள அருள்மிகு முப்பிடாதியம்மன் திருக்கோயில் கொடைவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி திங்கள்கிழமை மாலையில் குடிஅழைப்பு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலையில் பால்குட ஊா்வலமும், மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. மாலையில் திருநெல்வேலி குறுக்குத்துறையில் இருந்து கரககுடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பெண்கள் ஏராளமானோா் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா். இரவு சாமக்கொடை நடைபெற்றது. புதன்கிழமை (ஏப். 27) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.