நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதிய லாரி: சேதம் தவிா்ப்பு

பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்பில் லாரி மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. எனினும், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே சாலை நடுவில் உள்ள தடுப்பில் லாரி மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. எனினும், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்குச் சொந்தமான கண்டெய்னா் லாரி ஒன்று, தூத்துக்குடியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம், செங்கோட்டை நோக்கி வியாழக்கிழமை அதிகாலையில் சென்றுகொண்டிருந்தது.

இந்த லாரி, பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், லாரியின் முன்பக்கம், டயா்கள் சேதமடைந்தன. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், அதிகாலை நேரம் என்பதால், வாகனப்போக்குவரத்து குறைந்து காணப்பட்டதால் பெருஞ்சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com