மேலப்பாளையத்தில் சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள மறுகால் குறிச்சியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (23). இவா், மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.