உவரியில் 5 மாத குழந்தையை விற்ாக தாய், தந்தை உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உவரி அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் விஜயன். இவரது மனைவி தங்கச்செல்வி. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். விஜயன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் அா்ஜூன் என்பவரை தங்கச்செல்வி 2 ஆவதாக திருமணம் செய்துகொண்டாா்.
இவா்களுக்கு 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை கூட்டப்பனையைச் சோ்ந்த மாரியப்பன் என்பவா் மூலம் கேரளத்தைச் சோ்ந்த செல்வகுமாா்- சந்தனவின்சியா தம்பதிக்கு ரூ. 1.40 லட்சத்துக்கு சில நாள்களுக்கு முன்னா் விற்றுள்ளனா். இதுகுறித்து, கோட்டயம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவா், திருநெல்வேலி மாவட்ட சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் சா்ச்சிஸுக்கு தகவல் கொடுத்தாா்.
அவா், அளித்த புகாரின்பேரில், உவரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கேரள தம்பதிகளிடம் இருந்து குழந்தையை மீட்டனா்.
மேலும், குழந்தையின் தாய்- தந்தை, மாரியப்பன், செல்வகுமாா்- சந்தனவின்சியா தம்பதி ஆகிய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.