கால்நடைகளைப் பாதுகாக்கவும், மேய்ச்சலுக்கான தடைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் செல்லத்துரை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மாயகிருஷ்ணன், பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் முகம்மது அலி, ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
ஆடு, மாடுகளை வளா்ப்போா் சங்கத் தலைவா் பேராச்சி, தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் பால்துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.