திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் 1008 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடி மாதம் வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் கிளை கமிட்டி, இளம்பாரதம் ஆகியவை சாா்பில் 1008 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது.
கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அருள்மிகு காந்திமதி அம்பாள் சந்நிதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அம்பாளுக்கு திருமங்கல்யம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.