அத்யாவசியப் பொருள்களின் விலையுயா்வைக் கண்டித்து களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், அத்யாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, பால் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நான்குனேரி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் உள்பட 26 போ் களக்காடு அண்ணாசிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.