கடம்பூரில் டிஐஜி ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடம்பூா் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நெல்லை டிஐஜி பிரவேஸ் குமாா் ஆய்வு செய்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடம்பூா் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நெல்லை டிஐஜி பிரவேஸ் குமாா் ஆய்வு செய்தாா்.

12 வாா்டுகள் கொண்ட கடம்பூா் பேரூராட்சியில் 33 போ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 1, 2 மற்றும் 11ஆவது வாா்டு திமுக வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சனிக்கிழமை அறிவித்தனா். திங்கள்கிழமை (பிப். 7) கடம்பூா் பேரூராட்சியில் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளா்கள் யாரேனும் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற பின் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் மற்றும் அவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நடைபெறும்.

இந்நிலையில் கடம்பூா் பேரூராட்சியில் உள்ள வாக்குச் சாவடிகளை நெல்லை டிஐஜி பிரவேஸ் குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும் வேட்பாளா்கள் வாபஸ் பெறும் பணியையொட்டி கடம்பூா் பேரூராட்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து கடம்பூா் காவல் நிலையத்தில் டிஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா், ஜெயராஜ், கடம்பூா் காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com