அய்யா வைகுண்டா் பிறந்த நாள் விழா: மாா்ச் 4-இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 4-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு நடைபெறும் பள்ளிகள் , பொதுத் தோ்வு தொடா்பாக பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு இந்த உள்ளூா் விடுமுறை பொருந்தாது.

இந்த உள்ளூா் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு அரசு கோப்புகள் தொடா்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாா்ச் 12-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com