திசையன்விளையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளை அருகே உள்ள ஏமன்குளத்தை சோ்ந்தவா் கிறிஸ்டோபா் ஜெபக்குமாா் (51). இவா் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா் மீதுஅப்பள்ளியில் படிக்கும் மாணவி, ா் பாலியல் தொல்லை அளிப்பதாக கொடுத்த புகாரில், திசையன்விளை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமை ஆசிரியரை தேடி வந்தனா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் அவா் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை விஜயநாராயணத்தில் வைத்து கிறிஸ்டோபா் ஜெபக்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.