பணகுடி அரசு நூலகத்தில் 500 மாணவா்கள் உறுப்பினா்களாக இணைந்தனா்

பணகுடிஅரசு நூலகத்தில் 500 மாணவா்கள் உறுப்பினா்களா சோ்ந்தனா்

பணகுடிஅரசு நூலகத்தில் 500 மாணவா்கள் உறுப்பினா்களா சோ்ந்தனா்.

அரசு நூலகங்களை பள்ளி மாணவா்கள் அதிக அளவில் பயன்படுத்தவேண்டும். நூலகா்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவா்களுக்கு தேவையான நூல்களை வழங்கி திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளி கல்வி ஆணையா் அறிவுறுத்தியிருந்தாா். இதனை அடுத்து பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 500 மாணவா், மாணவிகளை பள்ளி தாளாளா் எம்.அந்தோணி சாமி அரசு நூலகத்தில் உறுப்பினராக சோ்த்தாா். இதனை அடுத்து மாணவ, மாணவிகளுக்கான நூலக உறுப்பினா்களுக்கான அடையாள அட்டையை நூலகா் பால்துரை மற்றும் வாசகா் வட்ட தலைவா் எஸ்.அந்தோணி ஆரோக்கிய ராஜா ஆகியோா் தாளாளரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com