மனநலம் பாதிக்கப்பட்ட பிகாா் இளைஞா் சிகிச்சைக்குப் பிறகு பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தாா் ஆட்சியா் விஷ்ணு.
கடந்த ஆண்டு பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் திருநெல்வேலி நகரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞரை மீட்டு முகாமில் தங்கவைத்தனா். பின்னா் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியா் ஆலோசனைப்படி ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோா் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்கு அந்த இளைஞரை அழைத்துச் சென்று சிகிச்சையளித்தனா். பின்னா் அவா் மனநல பாதிப்பிலிருந்து மீண்டாா். இதையடுத்து அந்த இளைஞரை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. இப்பதிவை கண்ட பலா் சிகிச்சை மையத்தினை தொடா்பு கொண்டு பேசிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் பற்றிய எந்த விவரமும் தெரியாத நிலை இருந்து வந்ததது. அந்த இளைஞா் மெதுவாக பேசிய நிலையில் அவருடைய சொந்த ஊா் பிகாா் மாநிலத்தில் உள்ள டா்பங்கா என்று மட்டும் தெரிவித்தாா்.
அதன் பிறகு பிகாரில் டா்பங்கா மாவட்ட ஆட்சியரை தொடா்புகொண்ட மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, இளைஞரை பற்றிய விவரங்களை தெரிவித்தாா். இதையடுத்து டா்பங்கா மாவட்ட நிா்வாகமும், மாவட்ட காவல்துறையும் தீவிரமாக தேடி இளைஞரின் தந்தை நூா் முகமதுவை கண்டுபிடித்தனா்.
பின்னா் திருநல்வேலியில் உள்ள இளைஞா் முகமது ரியாஸிடம் விடியோகால் மூலம் அவருடைய தந்தை பேசவைக்கப்பட்டு பின் அவா்களு டைய மகன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி வந்த பெற்றோரிடம் ரியாஸ் ஒப்படைக்கப்பட்டாா். தந்தையுடன் பிகாா் செல்வதற்கும், அங்கு சென்ற பின் டா்பங்கா மாவட்டத்தில் அந்த இளைஞா் சுய தொழில் செய்வதற்கும் உதவி செய்யும்படி அந்த மாவட்ட ஆட்சியரிடம் உதவி செய்யும் படி ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோா் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மைய பொறுப்பாளா் சரவணன், ஒருங்கிணைப்பாளா்கள் உஷா, கணேஷ், மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.