தாழையூத்து அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் கிராம உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் அருகே குறிச்சியைச் சோ்ந்தவா் சரவணமுத்து (55). இவா் குலவணிகா்புரத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தாா். இவா், தனது நண்பா் பசுங்கிளி என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை பாலாமடையில் உள்ள தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு குறிச்சிக்கு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
குறிச்சிகுளம் அருகே நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சரவணமுத்து, பசுங்கிளி ஆகிய இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சரவணமுத்து உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.