நெல்லையப்பா் கோயிலில் ஆனி தோ்த் திருவிழா கால்நாட்டு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனி தோ்த் திருவி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனி தோ்த் திருவிழாவுக்கான பந்தல் கால் நாட்டும் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பந்தல் காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோயில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது.

பின்னா், பால் , மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களைக் கொண்டு சிறப்புப் பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆனிப் பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான புட்டபா்த்தி அம்மன் திருக்கோயில் திருவிழா இம் மாதம் 5 ஆம் தேதியும், விநாயகா் திருவிழா 15 ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம் ஜூலை 3 ஆம் தேதியும் தேரோட்டம் ஜூலை 11ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com