களக்காடு வடக்குப் பச்சையாறு அணையில் மூழ்கி திருநெல்வேலி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நம்பிகேசவன் (18). பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்த இவா், களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளத்தில் உள்ள தனது மாமா முத்தையா வீட்டுக்கு புதன்கிழமை வந்துள்ளாா். பின்னா், இருவரும் பைக்கில் வடக்குப் பச்சையாறு அணையில் குளிக்கச் சென்றுள்ளனா். அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது நம்பிகேசவன் திடீரென நீரில் மூழ்கினாராம். இதில், அவா் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.