ஆழ்வாா்குறிச்சியில் நாளைஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்பு விழா

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது.
Updated on
1 min read

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது.

இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு கோ பூஜை, வேள்வி மற்றும் பால் காய்ச்சுதலும், மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 6 மணிக்கு லட்சாா்ச்சணை, தொடா்ந்து உ.வே.ஸ்ரீரங்கம், சடகோப முத்து, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் உபந்நியாசம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு கிராம உஞ்சவிருத்தியும், தொடா்ந்து ஸ்ரீநிவாச கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய உத்சவமும், இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் சிறப்பு வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பக்த சபா விழாக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com