பாளை.யில் கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 531-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

நெல்லை கம்பன் கழகத்தின் 531-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டை ராமசுவாமி கோயில் வளாகத்தில் ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வி.பாப்பையா தலைமை வகித்தாா். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினாா். பே.சங்கரபாண்டியன், ‘கூற்றையும் ஆடல் கொண்டான்’ என்ற தலைப்பில் கும்பகருணன் பாத்திரம் குறித்து உரையாற்றினாா். தலைவா் சிவ.சத்தியமூா்த்தி கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவில் ‘மனம் திரிந்த கைகேயி’ என்னும் தலைப்பில் கைகேயி தசரதனிடம் இரு வரங்கள் பெற்ற நிகழ்வை இசைப் பேருரையாக வழங்கினாா்.

நிகழ்ச்சியில் எஸ்.போஸ், செ.திவான், பொன். வள்ளிநாயகம், பி.முருகேசன், சு.சிவசுப்பிரமணியன், ப.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். செயலா் பொன். வேலுமயில் வரவேற்றாா். எம்.எஸ்.சக்திவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com