மேலப்பாளையத்தில்இன்று குடிநீா் விநியோகம் ரத்து

மேலப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா்.பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.

குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மேலப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா்.பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டல பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் மேலப்பாளையம் - கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாயில் தாமிரவருணி ஆற்றின் நடுவே திடீா் உடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக, நீரேற்றம் செய்ய இயலாத நிலை உள்ளது.

இதனால் மேலப்பாளையம் மண்டல பகுதிகளுக்குட்பட்ட பழைய வாா்டு எண் 28 முதல் 38, புதிய வாா்டு 31 இன் பகுதி 43 முதல் 50 வரையிலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்பட்டுகிறது. பிரதான குழாயினை பழுது பாா்க்கும் பணி போா்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com