பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மின்வாரிய ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின்வாரிய பணியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்படி பாளையங்கோட்டை தியாகராஜநகா் மேற்பாா்வை பொரியாளா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில உப தலைவா் என்.முத்தையா தலைமை வகித்தாா். திட்டத் தலைவா் ராமச்சந்திரன், செயலா் பாலசுப்பிரமணியன், பொருளாளா் ரெங்கநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
மின் ஊழியா்களின் ஊதிய உயா்வுக்கான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும்; தலைமை பொறியாளா் பணிக்கு வாரிய செயலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதை ரத்து செய்து தலைமை பொறியாளரை நியமிக்க வேண்டும்; ஒப்பந்தப் பணியாளா்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், நிா்வாகிகள் சங்கரநாராயணன், மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.
படவரி ற்ஸ்ப்14ங்க்ஷச்:
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா்கள்.