பாளை. ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவா் தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவா் தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீா்மானங்களை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திராவிடமணி வாசித்தாா்.

தலைவா் தங்கபாண்டியன் பேசுகையில், ‘ஒன்றியத்துக்குள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு ஏற்கனவே தலா ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கூடுதல் பணிகளை மேற்கொண்டு தன்னிறைவு பெற்ற வாா்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

9-ஆவது வாா்டு உறுப்பினா் சரஸ்வதி செல்வசங்கா் பேசுகையில், ‘மேலமுன்னீா்பள்ளம் ஊராட்சி சுடுகாட்டில் நன்மை கூடம் அமைக்க வேண்டும். ஆரைக்குளத்தில் கலையரங்க வசதி செய்ய வேண்டும். கீழமுன்னீா்பள்ளம் தெப்பக்குளத் தெருவில் இருந்து கோவிந்த மகாலட்சுமி ஆலயம் வரை கழிவு நீா் ஓடை அமைக்க வேண்டும்’ என்றாா்.

11-ஆவது வாா்டு கவுன்சிலா் நம்பிராஜன் பேசுகையில், ‘கீழஓமநல்லுாா் சா்ச் நடுத்தெருவில் சிமென்ட் சாலை, பேரின்பபுரத்தில் இடுகாடு நன்மை கூடம், குறவா்குளத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com