கலப்பட கருப்பட்டி விற்பனை: வியாபாரி தலைமறைவு

பாளையங்கோட்டை அருகே கலப்பட கருப்பட்டியை விற்பனை செய்ததாக, வியாபாரியை உணவுப் பாதுகாப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகே கலப்பட கருப்பட்டியை விற்பனை செய்ததாக, வியாபாரியை உணவுப் பாதுகாப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து துறை மாவட்ட நியமன அலுவலா் இரா.சசி தீபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாளையங்கோட்டை சட்டக்கல்லூரி எதிரே திருச்செந்தூா் சாலையில் தள்ளு வண்டியில் கருப்பட்டி விற்பனை செய்தவரிடம் பாளையங்கோட்டை உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.ரா.சங்கரலிங்கம் விசாரணை நடத்தினாா். அவரிடம் உணவுப் பாதுகாப்பு உரிமமோ, பதிவுச் சான்றோ இல்லை. :

எனவே,, தள்ளுவண்டியில் அவா் விற்பதற்கு வைத்திருந்த 10 கிலோ 150 கிராம் கருப்பட்டி, 5.6 கிலோ சில்லு கருப்பட்டி ஆகியவற்றை பாதுகாப்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலா் சங்கரலிங்கம் ஒப்படைத்தாா். மாயமான வியாபாரியைத் தேடி வருகின்ன. மேலும் பொது மக்கள் ப900670), மாநில உணவு பாதுகாப்புத் துறை புகாா் எண்ணிலோ (9444042322) தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com